Published : 23 Sep 2017 09:52 AM
Last Updated : 23 Sep 2017 09:52 AM

மியான்மர் இந்துக்கள் வங்கதேசத்தில் தஞ்சம்

மியான்மர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மியான்மரில் பெரும்பான்மை பவுத்தர்களுக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது. உயிருக்கு அஞ்சி சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அண்டைநாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மியான்மரில் வாழும் இந்துக்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்களும் அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் தஞ்மடைந்து வருகின்றனர். அகதிகள் முகாம்களில் முஸ்லிம்கள் குவிந்து வரும் நிலையில் இந்துக்களுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே வங்கதேச இந்துக்கள் சார்பில் எல்லையோர குட்டுபலாங் கிராமத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 500-க்கும் மேற்பட்ட இந்துக்கள் தங்கியுள்ளனர்.

மியான்மரில் இருந்து தப்பி வந்த நிரஞ்சன் கூறியபோது, “எங்கள் கிராமத்தில் 70 இந்து குடும்பங்கள் வசித்து வந்தன. எங்களை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தியதால் அங்கிருந்து தப்பி வங்கதேசத்துக்கு வந்தோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x