Published : 12 Jul 2014 03:56 PM
Last Updated : 12 Jul 2014 03:56 PM

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

ஆப்கன் தலைநகர் காபுல் நகரில் நடந்த சாலையோர குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த குண்டு வெடிப்பு காலை 10 மணியளவில் பாஞ்ஜ்வாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. சாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது மினி பேருந்து ஏறிய போது குண்டு வெடித்துச் சிதறியது.

இதில் மினி பேருந்தில் இருந்த 5 பெண்கள் 3 ஆண்கள் உள்பட 8 பேர் பலியாகியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x