Published : 09 May 2017 09:30 AM
Last Updated : 09 May 2017 09:30 AM
பாகிஸ்தான்- ஈரான் நாட்டு எல்லை யில் ஜெய்ஷ் அல் - அட் என்ற தீவிரவாத அமைப்பு செயல்படு கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஈரானுக்குள் போதை பொருட்களைக் கடத்து கின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த ஈரான் ராணுவம் எல்லையில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நீண்ட தொலைவு சுடும் துப்பாக்கி மூலம் ஈரான் ராணுவத்தின் 10 வீரர்களைச் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக ஈரான் ராணுவ தலைமைத் தளபதி முகமது பகுதி நேற்று கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண் டும். தீவிரவாதிகளின் அட்டூழியம் இனியும் தொடர்ந்தால் ஈரான் ராணுவம் சகித்துக் கொள்ளாது. நாங்களே நேரடியாக களம் இறங்கி, பாகிஸ்தான் மண்ணில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிப்போம். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT