Last Updated : 10 Dec, 2016 04:58 PM

 

Published : 10 Dec 2016 04:58 PM
Last Updated : 10 Dec 2016 04:58 PM

துருக்கி வான்வழித் தாக்குதலில் குர்திஸ் தீவிரவாதிகள் 19 பேர் பலி

இராக்கின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குர்திஸ் தீவிரவாதிகள் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து துருக்கி ராணுவம் வெளியிட்ட தகவலில், "வடக்கு இராக்கில் கரா பிராந்தியத்தில் துருக்கி ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் குர்திஸ்த்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் குர்திஸ் தீவிரவாதிகள் துருக்கி ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் இதனை முறியடிக்கவே வான் வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் அரசை எதிர்த்து குர்திஸ் இன மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்திவருகின்றனர். இதில் 27 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்.

துருக்கி அரசுக்கும் குர்திஸ் இனத்தவருக்கும் இடையே நடக்கும் மோதலில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் குர்திஸ் இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x