Published : 22 Dec 2016 09:39 AM
Last Updated : 22 Dec 2016 09:39 AM

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.7 ஆகப் பதிவானது.

பண்டா கடல் பகுதியில் நேரிட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 180 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும் சுனாமி அலைகள் உருவாக வில்லை.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப் பட்டது. எனினும் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவில் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பண்டா பகுதியில் உள்ள கட்டிடங்கள், சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. வீடுகள், அலுவலகங்களில் இருந்த பொதுமக்கள் சாலை, தெருக்களில் குவிந்தனர்.

கடந்த 2004 டிசம்பரில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகி இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x