Last Updated : 08 Dec, 2016 08:24 AM

 

Published : 08 Dec 2016 08:24 AM
Last Updated : 08 Dec 2016 08:24 AM

படகு மூழ்கி 60 பேர் பலி?

ஏமன் நாட்டின் தென்கிழக்கு துறை முக நகரான முகல்லாவில் இருந்து சொகோத்ரா தீவை நோக்கி 5 நாட்களுக்கு முன்பு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. குழந்தை கள், பெண்கள் உட்பட 60-க்கும் அதிகமானோர் பயணித்த அப்படகு இத்தனை நாட்களாகியும் கரை திரும்பவில்லை.

சொகோத்ரா தீவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் இப்படகு விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த 2 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

படகு மாயமாகி 5 நாட்கள் ஆனதால், அதில் பயணித்த சுமார் 60 பேர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கக் கூடும் என, ஏமன் அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x