Last Updated : 05 Dec, 2016 11:16 AM

 

Published : 05 Dec 2016 11:16 AM
Last Updated : 05 Dec 2016 11:16 AM

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

இந்தோனேசியாவில் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்தியில், "இந்தோனேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை 9.13 மணியளவில் கடலுக்கு அடியில் 522 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என இந்தோனேசியா தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x