

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை தங்கள் வசம் கொண்டுவர சிரிய அரசுப்படைகள் சண்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் உள்ள குடியிறுப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், வழிப்பாட்டு தளங்கள், பள்ளி கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் கிளர்ச்சிப் படை வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து வெளியேறி அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு இடப்பெயர்ந்து வருகின்றன.
மேலே உள்ள படத்தில், உள்ள சிறுமி சிரிய உள்நாட்டுப் போரினால் காயமடைந்து சக்கர நாற்காலியில் அமர்திருக்கும் தனது தந்தைக்கு மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று பெண் ஒருவரிடம் அழுதுக் கொண்டே கேட்கிறாள்.
மகள் இரவல் கேட்பதை காண சகிக்காத தந்தை கையறு நிலையில் கண்களை மூடி தலை கவிழ்ந்து தவிக்கிறார்.
படம்: ராய்ட்டர்ஸ்