Published : 28 Nov 2016 11:51 AM
Last Updated : 28 Nov 2016 11:51 AM
நேபாளத்தில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.6 ஆகப் பதிவானது.
நேபாளத்தின் சோலுஹும்பு மாவட்ட எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண் டிருந்தது. தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகர பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்களுக்கு உதவி செய்யும் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனைச் சேர்ந்த 2 மலையேற்ற வீரர்கள் காயமடைந்தனர்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரலில் நேரிட்ட நிலநடுக்கத்தில் 9000 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக அந்த நாட்டில் தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT