ட்ரம்ப் வெற்றி பெற்றதால் வெடித்தது வன்முறை

ட்ரம்ப் வெற்றி பெற்றதால் வெடித்தது வன்முறை
Updated on
1 min read

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

தேசிய கொடியை எரித்தும், டொனால்டு ட்ரம்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் பொது மக்கள் கடும் கண்டனம் தெரி வித்தனர். இதனால் அமெரிக்கா முழுவதும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களில் கலிபோர்னியா மாகாண தெருக்களில் நேற்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘ட்ரம்ப் எங்களது அதிபரல்ல’ என அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இதே போல் போர்ட்லேண்ட் உள்ளிட்ட பகுதியில் ஹிலாரியின் ஆதரவாளர்களும் அமெரிக்க தேசியக் கொடியை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பிரதான சாலைகளில் டயர்களை கொளுத்தியும், ட்ரம்பின் உருவபொம்மையை எரித்தும் வன்முறையில் இறங்கினர்.

இதைத் தொடர்ந்து சான்டீகோ, சான்பிரான்சிஸ்கோ மற்றும் சான்ஜோஸ் பகுதிகளிலும் ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in