Last Updated : 29 Nov, 2016 03:45 PM

 

Published : 29 Nov 2016 03:45 PM
Last Updated : 29 Nov 2016 03:45 PM

எங்கள் பொறுமையை குறைத்து மதிப்பிடாதீர்: இந்தியாவை எச்சரித்த பாக். முன்னாள் ராணுவ தளபதி

தங்கள் பொறுமையை பலவீனமாக எண்ண வேண்டாம் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் அந்நாட்டின் 16-வது ராணுவ தளபதி ஜெனரலாக காமர் ஜாவத் பஜ்வா செவாய்க்கிழமை பதவியேற்றார். இந்த விழாவில் முன்னாள் ராணுவ தளபதிகள், அமைச்சர்கள், வெளியுறவு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் பேசும்போது, "கடந்த சில மாதங்களாக ஜம்மு - காஷ்மீர் பகுதியில் இந்தியா தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் பொறுமையை இந்தியா பலவீனமாக எண்ண வேண்டாம். அவ்வாறாக எங்கள் பொறுமையை குறைத்து மதிப்பிடுவது அபாயகரமானது.

என்னுடைய பதவி காலத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவிலும் தேசத்தின் நலனுக்கே முன்னுரிமை அளித்துள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x