Last Updated : 16 Nov, 2016 10:27 AM

 

Published : 16 Nov 2016 10:27 AM
Last Updated : 16 Nov 2016 10:27 AM

காலாவதியான ரூபாய்களை மாற்ற உதவ வேண்டும்: மோடிக்கு நேபாள பிரதமர் கோரிக்கை

இந்தியாவில் காலாவதியான ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள நேபாள மக்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார்.

நேபாள பிரதமர் பிரசண்டா, பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரசண்டாவின் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேபாளிகள் இந்தியாவில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காகவும், அத்தியா வசிய பொருட்களை வாங்குவதற் காகவும் பலர் இந்தியாவுக்கு அடிக்கடி பயணம் செய்கின்றனர். இதனால் நேபாள மக்ககளிடம் இந்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளா விட்டால் இவர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் இழக்க நேரிடும். எனவே, காலாவதியான ரூபாய் நோட்டுகளை நேபாளத்திலேயே மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பிரசண்டா கோரிக்கை வைத்துள்ளார்.

இதைக் கேட்டுக்கொண்ட மோடி, இது தொடர்பாக நேபாள நிதியமைச்சருடன் பேசுமாறு இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை கேட்டுக் கொள்வதாக உறுதி அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ரூ.25 ஆயிரம் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க அனுமதி உண்டு. எனவே, அங்கு சுமார் 3.36 கோடி மதிப்பிலான பணம் இருக்கலாம் என நேபாள ராஸ்ட்ரா வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் இதைவிட அதிக தொகை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x