Last Updated : 09 Nov, 2016 10:33 AM

 

Published : 09 Nov 2016 10:33 AM
Last Updated : 09 Nov 2016 10:33 AM

அமெரிக்காவின் 45-வது அதிபர் டொனால்டு ட்ரம்ப்: உலகை வியப்பில் ஆழ்த்திய முடிவுகள்

பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி: நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம்

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (70) வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்பாராத இந்த வெற்றியால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதேநேரம், நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக தலைவர்கள் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது. ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் (69) குடியரசு கட்சி சார்பில் அரசியல் அனுபவம் இல்லாத கோடீஸ்வர தொழிலதி பரான டொனால்டு ட்ரம்பும் (70) போட்டியிட்டனர்.

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் வகை யில் அமைந்தது. பிரச்சாரத்தின் போது, இருவரும் பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறினர்.

அமெரிக்காவில் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப் பேன், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்ற ட்ரம்பின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மீது சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனால், அவரது கட்சிக்குள் ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பாலான ஊடகங்களும் ட்ரம்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்தன. இதனால், ஹிலாரி வெற்றி பெறுவார் என பல்வேறு நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

எனினும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது தனது தனிப்பட்ட இ-மெயில் சர்வரை அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி யதாக ஹிலாரி மீது ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது ஹிலாரிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால் ட்ரம்பின் செல்வாக்கு சற்று அதிகரித்தது. எனினும், ஹிலாரியே வெற்றி பெறுவார் என இறுதிக் கட்ட கருத்து கணிப்புகளும் தெரிவித்தன.

இந்நிலையில் 8-ம் தேதி 50 மாகாணங்களிலும் வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. தொடக்கத்தில் இருவருக்கும் இடையே, இழுபறி நிலவியபோதிலும், யாருமே எதிர்பாராத வகையில் பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக, பென்சில்வேனியா, ஓஹியோ, புளோரிடா, டெக்சாஸ், அலாஸ்கா மற்றும் வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்கள் ட்ரம்பின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன.

நாட்டின் முதல் பெண் அதிபரா வார் என ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் (69) அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். மொத்தம் உள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் இதுவரை ட்ரம்புக்கு 289-ம், ஹிலாரிக்கு 218-ம் கிடைத்துள்ளது.

இன்னும் சில மாகாண முடிவுகள் வர வேண்டி உள்ளது. எனினும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற 270 வாக்குகள் தேவை என்பதால் ட்ரம்ப் வெற்றி பெறுவது உறுதி.

இந்த தேர்வாளர்கள் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரை டிசம்பர் மாதம் முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார். இவர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

தேர்தல் வெற்றி குறித்து தனது பிரச்சார தலைமை அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசும்போது, “நாம் அனை வரும் ஒன்றாக இணைய வேண்டிய தருணம் இது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் அதிபராக இருப்பேன் என உறுதி கூறுகி றேன். ஹிலாரி கிளின்டன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்தார். கடுமையான போட்டியாக விளங்கிய அவருக்கு நன்றி தெரி வித்தேன்” என்றார்.

நாட்டின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், முதல்முறை அதிபராக பொறுப் பேற்றவர்களில் அதிக வயது டையவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ட்ரம்பின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களும் குடியரசு கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.

உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, துருக்கி பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

ஹிலாரி கிளின்டன் வெற்றி பெறுவார் என உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர் பாராதவிதமாக ட்ரம்ப் வெற்றி பெற்ற தால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. அமெரிக்க டாலர் மதிப்பும் கடுமையாக சரிந்தது.

ஹிலாரி மீதான இ-மெயில் புகாருக்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. எனினும், இ-மெயில் விவகாரம் தொடர்பான புதிய புகார் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கடந்த மாத இறுதியில் எப்பிஐ இயக்குநர் தெரிவித்தார். இது ஹிலாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

எனினும், வாக்குப்பதிவுக்கு 2 நாள் முன்னதாக, இந்தப் புகாருக்கு ஆதாரம் இல்லை என அறிவித்தார். ஆனாலும் காலதாமதமாக இந்த அறிவிப்பு வெளியானதால் ஹிலாரி யின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x