Published : 10 Sep 2022 06:04 AM
Last Updated : 10 Sep 2022 06:04 AM

300 வைரம் பதித்த நெக்லஸ் - ராணிக்கு பரிசளித்த நிஜாம்

ஹைதராபாத்: கடந்த 1947 நவம்பர் 20-ம் தேதி அப்போதைய இளவரசி எலிசபெத்துக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது உலகம் முழுவதும் இருந்து அவருக்கு பரிசுகள் குவிந்தன.

இந்தியாவின் ஹைதராபாத் நிஜாமாக இருந்த எட்டாம் ஆசாப் ஜா, இளவரசி எலிசபெத்துக்கு பரிசளிக்க விரும்பினார்.

லண்டனில் உள்ள கார்டியர் நகைக்கடையில் இளவரசிக்கு என்ன நகை பிடித்திருக்கிறதோ அதற்கான தொகையை செலுத்தி விடுவதாக ஆசாப் ஜா உறுதி அளித்தார். இதன்படி 300 வைரங்கள் பதிக்கப்பட்ட பிளாட்டினம் நெக்லஸை இளவரசி எலிசபெத் தேர்வு செய்தார். அவர் ராணியாக பதவியேற்ற பிறகு இந்த நெக்லஸையே அதிகம் விரும்பி அணிந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x