Published : 06 Sep 2022 08:38 AM
Last Updated : 06 Sep 2022 08:38 AM

சீனாவில் நிலநடுக்கம் 7 பேர் உயிரிழப்பு

சிச்சுவான்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சீன அரசின் ஊடகமான சிஜிடி என் கூறியதாவது. சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது.

லூடிங் நகரத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு சிச்சுவான் தலைநகர் செங்குடுவில் 7 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், தொலைத் தொடர்பு சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x