Published : 08 Oct 2016 11:21 AM
Last Updated : 08 Oct 2016 11:21 AM
கடந்த 2006-ம் ஆண்டில் வட கொரியா முதல்முறையாக அணு குண்டு சோதனையை நடத்தியது. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி 5-வது அணுஆயுத சோதனையை அந்த நாடு மேற்கொண்டது.
இந்நிலையில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு அந்த நாடு தயாராகி வருகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த 38 நார்த் குழு என்ற கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகொரியாவின் அணுசக்தி நிலையங்களில் அணுஆயுத சோதனைக்கான ஏற்பாடுகள் நடைபெறுவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 71-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அந்த நாடு மீண்டும் அணுஆயுத சோதனையை நடத்தக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT