நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
Updated on
1 min read

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் , பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் கடந்த வாரம் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாபாஸ் கில்லுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபட்டார் என இம்ரான் கான் கட்சி குற்றம் சுமத்தியது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் தலைமையில் கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில், அந்நாட்டின் பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்தார்.

இதுதான் சர்ச்சையாக மாறியது. இம்ரான் கான் வரம்பு மீறி அரசு அமைப்புகளுக்கே மிரட்டல் விடுக்கிறார் என பாகிஸ்தான் அரசு அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதன் காரணமாக இம்ரான் கான் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இஸ்லமாபாத் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in