Published : 25 Aug 2022 05:05 AM
Last Updated : 25 Aug 2022 05:05 AM

போர் விமான இன்ஜின்களை வாங்க சீனாவை தவிர்த்து ரஷ்யாவிடம் நேரடியாக பேசும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: போர் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் சீனாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஜேஎஃப்-17 ரக போர் விமானங்களுக்கான இன்ஜின்களில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு பழுதாகின்றன.

காஷ்மீரின் பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லை தாண்டி இந்தியா ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்தனர். அதன்பின்னர் சீனாவின் ஜேஎஃப்-17 ரக போர் விமானங்களை இந்திய பகுதிக்கு பாகிஸ்தான் அனுப்பியது. அவற்றை இந்திய விமானப் படை விரட்டி அடித்தது.

இந்நிலையில், சீன விமானத்தின் இன்ஜின்கள் பழுது பார்த்தல் பராமரித்தல் போன்ற சேவைகளுக்கு அந்நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், நேரடியாக ஜேஎஃப் 17 ரக போர் விமானங்களுக்கான இன்ஜின்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த விமானங்களுக்கான ஆர்டி-93 ரக இன்ஜின்களை, ரஷ்யாவின் கில்மோவ் நிறுவனத்திடம் பாகிஸ்தான் வாங்க உள்ளது. அந்த நிறுவனமும் இன்ஜின்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆர்டி-93 இன்ஜின்கள் மற்றும் அதுதொடர்பான கருவிகளை அளிக்கவும், பராமரிப்புப் பணிகளை செய்யவும் ரஷ்யாவின் கில்மோவ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x