Last Updated : 28 Oct, 2016 01:39 PM

 

Published : 28 Oct 2016 01:39 PM
Last Updated : 28 Oct 2016 01:39 PM

தேர்தலை ரத்து செய்துவிட்டு நான் வெற்றி பெற்றதாக அறிவிப்பீர்: டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலை ரத்து செய்துவிட்டு தான் வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஒஹியோ மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், "இத்தருணத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தேர்தலை ரத்து செய்துவிட்டு நான் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பதே சிறந்தது. ஏனெனில் ஹிலாரியின் கொள்கைகள் மிக மோசமாக இருக்கின்றன. தேர்தலை நடைமுறைகள் சீர்கெட்டுவிட்டன. ஊடகங்கள் எனது பிரச்சாரங்களை திட்டமிட்டே தோற்கடிக்கச் செய்தன.

ஹிலாரிக்கு அமெரிக்க அதிபர் தேர்தலை ஏற்றுக்கொள்ளும் திறன் இல்லை. எனவே, தேர்தலை ரத்து செய்துவிட்டு நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என்றார்.

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், ட்ரம்ப் சமீப காலமாகவே அதிபர் தேர்தலை ஏன் நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பிவருகிறார்.

இந்நிலையில், அவருடைய இந்தக் கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x