சீனா அச்சுறுத்தல் குறையவில்லை - தைவான் தகவல்

சீனா அச்சுறுத்தல் குறையவில்லை - தைவான் தகவல்
Updated on
1 min read

தைபே: தைவான் அதிபர் ட்சாய் யிங்-வென் வியாழக்கிழமை கூறியதாவது:

மோதல் மற்றும் சர்ச்சையை தூண்டும் வகையில் தைவான் எவ்வித நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை. எனினும், சீனாவிடமிருந்து வரும் ராணுவ அச்சுறுத்தல்கள் தற்போது வரை நின்றபாடில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பில் நாங்கள் உறுதியுடன் செயல்படுவோம். ஒவ்வொருவரும் ஜனநாயகம், சுதந்திரத்தின் எல்லையை மதிக்க வேண்டும். இவ்வாறு ட்சாய் கூறினார்.

தைவான் நீரிணைப் பகுதிகளில் ராணுவ பயிற்சிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணி மட்டும் நடைபெறும் என்றும் சீனா தற்போது கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in