Published : 26 Jul 2022 06:19 AM
Last Updated : 26 Jul 2022 06:19 AM

திரவுபதி முர்முவுக்கு சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து

புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ரஷ்ய, சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள். திரவுபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்கவும் விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உயரிய பதவியான குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 23-ம் தேதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x