Published : 30 Sep 2016 09:50 AM
Last Updated : 30 Sep 2016 09:50 AM
தனது நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உரிய பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என வங்கதேசம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச பிரதமரின் ஆலோசகர் இக்பால் சவுத்ரி கூறியதாவது:
இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா வுக்கு அனைத்து சட்டப்பூர்வ, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை உண்டு. காஷ்மீர் பிரச் சினை என்பது இருதரப்பு பிரச் சினை. ஆனால், ஒரு தரப்பில் விதிமீறல் நிகழ்ந்துள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மை, சுதந் திரம், சட்டப்பூர்வ உரிமையின் மீது மேற்கொள்ளப்படும் எவ்வகைத் தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் இறையாண் மைக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே வங்க தேசத்தின் நிலைப்பாடு.
அது அண்டை நாடாக இருந் தாலும் சரி, தங்கள் மீதான தாக்கு தலுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசுக்கும் அதன் மக்களுக்கும் முழு உரிமை உண்டு. எனினும் அமைதியான சூழலுக்காக இரு தரப்பும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT