Published : 03 May 2016 09:45 AM
Last Updated : 03 May 2016 09:45 AM
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.1 ஆகப் பதிவானது.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ‘பசிபிக் நெருப்பு வட்டத்தில்’ இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. கடந்த 9-ம் தேதி அங்குள்ள சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.9 ஆக பதிவானது.
இந்நிலையில் சுமத்ரா தீவின் டாங்காமஸ் நகரை மையமாகக் கொண்டு நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் நிலநடுக்கம் காரண மாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2004-ம் ஆண்டில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவாகி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 2.8 லட்சம் பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT