Published : 29 May 2016 12:09 PM
Last Updated : 29 May 2016 12:09 PM

யோகா தினம் ஐ.நா.வில் ஜக்கி பங்கேற்பு

வரும் ஜூலை 21-ம் தேதி 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி. ஐக்கிய நாடுகள் சபையில் யோகா நிகழ்ச்சிகளை சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திக் கொடுக்கவுள்ளார்.

நடப்பாண்டு சர்வதேச யோகா தினத்தில், நீடித்த வளர்ச்சி இலக்கு மையக் கருவாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியா வின் நிரந்தர பிரதிநிதி இதுதொடர்பாகக் கூறும்போது, “சர்வதேச யோகா தினத்தன்று ஐ.நா.வில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியை ஜக்கி வாசுதேவ் நடத்திக் கொடுப்பார்” என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச யோகா தினத்தில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ- மூன், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமெரிக்க எம்.பி. துளசி கப்பார்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், பான் கீ-மூன், அவரது மனைவி உட்பட ஏராளமானவர்கள் யோகாசனம், தியானம் செய்தனர்.

நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x