Published : 08 May 2016 12:49 PM
Last Updated : 08 May 2016 12:49 PM
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தாரிக் என்பவர் இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது தம்பி காலித் மெஹ்மூத்தும் அதே பகுதியில் இனிப்பு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் தம்பி காலித்தை முந்தி தாரிக் நன்கு சம்பாதித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவமானம் அடைந்த காலித், தனது அண்ணனான தாரிக்குக்கு பாடம் புகட்ட நினைத்து, அவரது கடையில் இருந்த இனிப்பு பண்டங்கள் மீது பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துள்ளார். பேரக்குழந்தை யின் பிறந்த நாள் விழாவுக்காக அந்த இனிப்புகளை வாங்கிச் சென்று சாப்பிட்ட ஒரே குடும்பத் தினர் 52 பேருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடி யாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 5 குழந் தைகள் உள்பட அந்த குடும்பத்தின் 31 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் இனிப்பு பண்டத் தில் இருந்த பூச்சிக் கொல்லியே மரணத்துக்கு காரணம் என தெரிய வந்தது.
இதையடுத்து இனிப்பு கடை உரிமையாளரான தாரிக், அவரது தம்பி காலித் மற்றும் கடை ஊழியர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அண்ணனை பழிவாங்கவே இனிப்பு பண்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததாக காலித் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT