Published : 01 May 2016 12:26 PM
Last Updated : 01 May 2016 12:26 PM
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலர் அந்தோணி பிளிங் கனை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பிராந்திய பிரச்சி னைகள் குறித்து விவாதித்தார். அப்போது இரு நாட்டு அதிகாரி களும் ஆக்கப்பூர்வ அணுசக்தி கூட்டுறவு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது பருவ நிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு இந்தியாவின் பங்களிப்பு பாராட் டத்தக்க வகையில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலர் அந்தோணி தெரிவித்தார்.
வரும் ஜூன் மாதம் நடக்க வுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தின் கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்ற வரும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் அங்கு சென்றிருப்பது, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை உறுதி செய்வதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT