Published : 21 Jun 2022 01:08 PM
Last Updated : 21 Jun 2022 01:08 PM

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை: மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு

தென் பகுதி சீனாவில் 60 ஆண்டுகள் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக தென் பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சீனாவில் தென் பகுதியில் பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையில் 7 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கவுண்டான் மாகாணத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு, கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 1,77,660 பேர் வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். 1,700க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னும் சில நாட்கள் சீனாவின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவில் ஜூன் மாதங்களில் மழை பெய்வது இயல்பானதுதான். ஆனால் கடந்த வருடங்களில் பருவ மழை தீவிரத்தன்மையுடன் பெய்து வருவதாக அந்நாட்டு சூற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். அதிகப்படியான வெயில், மழை, புயல் என இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து வருகின்றன.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x