மனித உரிமைகள் ஆணையம் ஆப்கனில் கலைப்பு

மனித உரிமைகள் ஆணையம் ஆப்கனில் கலைப்பு
Updated on
1 min read

காபூல்: ஆப்கானிஸ்தான் நாடு கடந்த ஆண்டு தலிபான்கள் வசம் மீண்டும் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

ஆனால் அதை மறுக்கும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்தவொரு தீவிரவாத இயக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவந்த மனித உரிமைகள் ஆணையத்தை தலிபான்கள் கலைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், நாட்டில் செயல்பட்டு வந்த தேசிய நல்லிணக்க உயர் கவுன்சில் (எச்சிஎன்ஆர்) உள்ளிட்ட 4 அமைப்புகளும் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் இனாமுல்லா சமாங்கனி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in