Published : 08 May 2016 12:51 PM
Last Updated : 08 May 2016 12:51 PM
கனடாவின் போர்ட் மெக்மர்ரி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பள வுக்கு தீ பற்றி எரிகிறது.
சுமார் 1600 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளன. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். போர்ட் மெக்மர்ரி நகரில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன.
அவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் அபாய எல்லைப் பகுதியை தாண்டவில்லை. இதனால் அவர்கள் பரிதவித்து வருகின்றனர். தங்க இடமின்றி பலர் கார்களிலேயே தஞ்ச மடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT