Published : 08 May 2016 12:53 PM
Last Updated : 08 May 2016 12:53 PM
அல் காய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் வேட்டைக்கு தலைமை வகித்த அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) முன்னாள் உயர் அதிகாரிக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ விஷம் வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானின் அபோதாபாதில் பதுங்கியிருந்த பின்லேடன் 2011 மே 2-ம் தேதி அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். பின்லே டனை கண்டுபிடிப்பதற்கான படைக்கு சிஐஏ அதிகாரியான மார்க் கெல்டன் தலைமை வகித்தார்.
இந்த சம்பவம் நடந்த 2 மாதங் களுக்குப் பிறகு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிஐஏ-விலிருந்து ஓய்வு பெற்றார். அடிவயிற் றில் அறுவை சிகிச்சை செய்த பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற் றம் ஏற்பட்டது. எனினும், கெல்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவருக்கு ஐஎஸ்ஐ அமைப்பு விஷம் வைத்திருக்கலாம் என சிஐஏ அதிகாரிகள் சிலர் சந்தேகிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT