Published : 02 Apr 2016 09:38 AM
Last Updated : 02 Apr 2016 09:38 AM
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 59 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
சிந்து மற்றும் குஜராத்துக்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மீனவர்களின் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களை கராச்சி கொண்டு சென்று, சட்டப் பூர்வ நடவடிக்கைக்காக காவல் துறையிடம் கடல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் எல்லை தெளி வாக வரையறுக்கப்படாததால், இந்திய, பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றத்துக்காக அடிக்கடி கைது செய்யப்படுகின் றனர். கடந்த மாதம் நல்லெண்ண அடிப்படையில் இரண்டு முறை தலா 86 இந்திய மீனவர்களை சிறையிலிருந்து பாகிஸ்தான் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
மலிர் சிறையில், 377-க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் களில் 116 பேர் தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்து விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT