

அரசுப் படைகளின் எதிர்ப்பை முறியடித்து இராக்கின் வடக்குப் பகுதியில் தீவிரவாதிகள் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதையடுத்து அச்சமடைந்துள்ள பொதுமக்கள் தமது கிராமங்களை விட்டு வெளியேறி குர்துக்களின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை குவிந்தனர்.
பிற பகுதிகளை விட இந்த பிராந்தியம் பாதுகாப்பு மிக்கதாக கருதி நூற்றுக்கணக்கானோர் இங்கே தஞ்சம் புகுந்துள்ளனர். தஞ்சம் புகுபவர்களில் ஏராள மானோர் ஷியா பிரிவினர். இவர்கள் மோசுல் நகருக்கு வெளியே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நகரை இந்த மாத தொடக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சன்னி தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
சிரியா-இராக் எல்லைகளின் இரு புறத்திலும் முழுக்க முழுக்க இஸ்லாமிய அதிகார பகுதியை அமைப்பது என்ற நோக்குடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இராக் அரசுப் படைகளை எதிர்த்து போரிட்டு முன்னேறி வருகின்றனர்.
வடக்கில் கிறிஸ்தவர்கள் வசிக்கும் கிராமங்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத் தப்படுவதால் கிறிஸ்தவர்களும் குர்து தன்னாட்சிப் பகுதியில் தஞ்சம் கேட்டு வருகின்றனர். குர்திஷ் பிராந்தியத்தின் எல்லைப் பகுதியிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஹம் தானியா என்ற இடத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
ஷியா பிரிவினர்களை ஈவிரக்க மின்றி தீவிரவாதிகள் கொல்கின்ற னர். ஷியா பிரிவினரின் வீடு ஒவ்வொன்றையும் தீ வைத்து கொளுத்துகிறார்கள். குபாபகுதி யில் தங்கி இருக்க அஞ்சி அனை வரும் வெளியேறி விட்டனர் என்று ஒருவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் மீது சிரியா தாக்குதல்
பாக்தாதின் வடக்கே உள்ள பலாத் பகுதியில் உள்ள விமானப் படை முகாமை தாக்குவதாக அச்சுறுத்தி இருந்த சன்னி தீவிர வாதிகளை எதிர்த்து அரசு ஆதரவு படைகள் சண்டையிட்டன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இராக்கில் அரசுப்படைகளை எதிர்த்து சண்டையிடும் சன்னி தீவிரவாதிகளை எதிர்த்து சிரியா நாட்டின் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதை இராக் பிரதமர் நூரி அல் மாலிகி வியாழக்கிழமை உறுதி செய்தார்.
ஆனால் இந்த தாக்குதலை நடத்தும்படி இராக் வேண்டுகோள் விடுக்கவில்லை என்று தெரிவித்த மாலிகி, தீவிரவாதிகள் மீதான தாக்குதலை வரவேற்பதாக அறிவித்தார். இந்நிலையில், பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் வில்லியம் ஹேக் பாக்தாதுக்கு பயணம் மேற்கொண்டு இராக் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத் தினார். இதற்கிடையில் இராக் தள பதிகளுடன் அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஜூலை 1ல் நாடாளுமன்றக் கூட்டம்
ஜூலை 1 ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அதில் பங்கேற்க புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தில் புதிய அரசு அமைப்பது பற்றி விவாதிக்கப்படும் என அறிவித்துள்ளார் அதிபர் ஜலால் தலிபினி.