Published : 01 Apr 2016 10:10 AM
Last Updated : 01 Apr 2016 10:10 AM
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் சான்பிரான் சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் அந்நிறுவன தலைமை செயல் அதி காரியும் (சிஇஓ) இந்தியருமான சத்ய நாதெள்ளா பேசியதாவது:
நாள்தோறும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், மனிதனின் மொழி களை கணினிகளுக்கு கற்றுக் கொடுப்பதுடன் நம்மைப் போல பொதுமக்களுடன் உரையாடவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இதற்காக நம்மைச் சுற்றி நடக் கும் நிகழ்வுகளை கணினிகளுக் குள் புகுத்த வேண்டும். அதேநேரம் சிறந்த மனிதத்தன்மை கொண்ட மதிப்புமிக்க தொழில்நுட்பத்தை உருவாக்க நிறுவனங்கள் முன் வர வேண்டும். மோசமான மனிதத் தன்மை கொண்ட தொழில்நுட் பத்தை உருவாக்கக் கூடாது.
இதன்மூலம் வருங்காலத்தில் கணினிகள் மனிதர்களுக்கு போட் டியாக உருவெடுத்துவிடும் என்று எண்ணத் தேவையில்லை. மனிதர் களின் அன்றாட பணிகளுக்கு மிக வும் உறுதுணையாகவே இருக் கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT