Published : 23 Jun 2014 11:13 AM
Last Updated : 23 Jun 2014 11:13 AM
மலேசிய விமானம் நடுவானில் மாயமான சம்பவத்தில் தலைமை விமானி ஜகாரியா ஷா மீது சந்தேகம் வலுத்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் மர்மமாக மாயமானது.
இதுதொடர்பாக விமானத்தில் பயணம் செய்த தலைமை விமானி, துணை விமானி, சிப்பந்திகள், பயணிகள் குறித்து மலேசிய போலீஸார் விசாரித்துள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தலைமை விமானி ஜகாரியா ஷா மீதான சந்தேகம் வலுத்துள்ளது.
அவரின் வீட்டில் அமைக் கப்பட்டிருந்த விமான சிமுலேட்ட ரில் நீளம் குறைவான ஓடுபாதை யில் விமானத்தை தரையிறக்கு வது தொடர்பான சாப்ட்வேர் பதி வேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த சாப்ட்வேர் அழிக்கப் பட்டிருந்தாலும் கணினி நிபுணர் கள் அதனை மீட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாத சதி குறித்தும் மலேசிய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய போலீஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரிட்டனைச் சேர்ந்த “தி சண்டே டைம்ஸ்” நாளிதழ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT