Published : 15 Apr 2016 09:48 AM
Last Updated : 15 Apr 2016 09:48 AM
கடந்த 15 ஆண்டுகளில் தீவிரவாதத் துக்கு எதிரான போருக்காக பாகிஸ் தானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.86,480 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது.
அல் காய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தாக்குதல் நடத்தியது. அல் காய்தா அமைப்புக்கு எதிரான இந்தப் போரில் பாகிஸ்தான் உதவியைப் பெறுவதற்காக, கடந்த 2001-ம் ஆண்டு முதல் அந்த நாட்டுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் குழு (பாது காப்பு) கூட்டத்தில் அந்நாட்டு பாது காப்புத் துறை செயலாளர் ஆலம் கட்டாக் பேசும்போது, “கடந்த 2001-ம் ஆண்டு முதல் இதுவரை தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா ரூ.86,450 கோடி நிதி யுதவி வழங்கி உள்ளது. மேலும் சுமார் ரூ.1,330 கோடியை அந்த நாடு தர வேண்டி உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT