Published : 26 Apr 2016 10:50 AM
Last Updated : 26 Apr 2016 10:50 AM
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதி களுக்கு எதிரான போரில் ஈடுபட கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று ஜெர்மனியின் ஹனோவர் நகரில் அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசினார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளில் நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும். அவர்களுக்கு எதிராகப் போரிட சிறப்பு படைப் பிரிவைச் சேர்ந்த 300 வீரர்கள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
எனினும் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படைகள் தரை வழிப் போரில் ஈடுபடாது. வான்வழி தாக்குதல்களில் மட்டுமே ஈடுபடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சியால் சிரியாவில் அரசுப் படைகளுக்கும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. அதன்படி அங்கு முகாமிட்டிருந்த பெரும்பாலான ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டன.
தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்ய ராணுவப் படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் ரஷ்ய விமானப் படை உதவியுடன் சிரிய அரசுப் படைகள் அண்மை யில் பல்மைரா நகரை மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT