Published : 25 Apr 2016 08:09 AM
Last Updated : 25 Apr 2016 08:09 AM

ஐஎஸ் தாக்குதலில் 14 பேர் பலி

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய இருவேறு தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத் நகரின் புறநகர் பகுதி களில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டனர்.சனிக்கிழமை இரவு ஹுசைனியா பகுதியில் சோதனைச் சாவடி மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டதில், 6 பொதுமக்கள், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 28 பேர் காயமைடந்தனர். அராப் ஜபூர் பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 8 வீரர்கள் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x