Last Updated : 27 Jan, 2022 06:23 PM

 

Published : 27 Jan 2022 06:23 PM
Last Updated : 27 Jan 2022 06:23 PM

மாறிய உலகம்... மாறாத ஜொனாதன்... - 190 வயது ஆமையும் வியத்தகு பின்புலமும்

படம்: ட்விட்டர் உதவி

ராணி விக்டோரியா பதின்பருவத்தில் வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் ஜொனாதன் பிறந்தது. 120 வருடங்களுக்கு முன்னர், தனது 81 வயதில் ராணி விக்டோரியா மரணித்துவிட்டார். ஆனால், இன்றும் ஜொனாதன் இன்னமும் செயின்ட் ஹெலினா தீவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் 190-வது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம், இதுவரை வாழ்ந்த ஆமைகளில் மிகவும் வயதான ஆமை என்ற பெருமை, ஜொனாதனுக்கு கிடைக்கவுள்ளது.

1832-ஆம் ஆண்டு பிறந்ததாகக் கருதப்படும் ஜொனாதன், சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் 1882 ஆண்டு பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் ஹெலினாவுக்கு கவர்னராக வருகை புரிகிறார். இவருடன்தான் ஜொனாதனும் செயின்ட் ஹெல்னாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை செயின்ட் ஹெலினாவில், சுமார் 31 கவர்னர்களை ஜொனாதன் சந்திருக்கிறது. செயின்ட் ஹெலினாவின் கவர்னர் இல்லத்தில்தான் ஜொனாதன் தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறது.

செயின்ட் ஹெலினாவில் சுற்றுலாத் தலைவர் மேட் ஜோஷுவா கூறும்போது, ”ஜொனாதனுக்கு உண்மையில் 200 வயது இருக்கலாம். ஏனெனில் ஜொனாதன் செயின்ட் ஹெலினா தீவுக்கு வந்ததைப் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஜொனாதன் எந்த ஆண்டு, எந்த தினத்தில் பிறந்தது என்பதற்கான பதிவும் இல்லை” என்று தெரிவித்தார்.

ஜொனாதனுக்கு முன்பு, டோங்கா தீவை சேர்ந்த தூய் மலிலா என்ற ஆமைதான் உலகின் வயதான ஆமையாக இருந்தது. தூய் மலிலா தனது 188 வயது வரை வாழ்ந்தது. 1965-ஆம் ஆண்டு தூய் மலிலா உயிரிழந்தது.

ஜொனாதனும் - உலகின் மாற்றமும்

ஜொனாதன் பிறந்ததிலிருந்து, உலகம் அளவிட முடியாத அளவில் மாறியுள்ளது. ஜொனாதன் பிறந்த பிறகுதான் உலகில் முதன்முதலில் புகைப்படம் 1838-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஒளிரும் விளக்கு 1878-இல் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் முதல்முதலாக 1903-இல் விண்ணில் பறந்தது, 1969-ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் முதலில் காலடி வைத்தார். இரண்டு உலகப் போர்களை உலகம் கண்டது.

ஆனால், ஜொனாதனின் உலகில் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. தூங்குவது, சாப்பிடுவது, நடப்பது செய்வது இதைதான் ஜொனாதன் இத்தனை வருடங்களாக செய்து கொண்டிருக்கிறது.

இனச்சேர்கை சேர்க்கையில் ஆர்வம்

வயோதிகம் காரணமாக வாசனை உணர்வு, கண் பார்வையை ஜொனாதன் இழந்துள்ளது. பார்வை இழந்துள்ளதால் ஜொனாதனுக்கு உணவு கையில் வழங்கப்படுகிறது. ஜொனாதன் இன்னமும் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருக்கிறது. கேரட், கோஸ், ஆப்பிள், வெள்ளரி போன்றவை ஜொனாதன் விரும்பி உண்ணும் உணவுகள் என்று அதன் பராமரிப்பார்கள் கூறுகின்றனர்.

கொண்டாட்டங்களுக்கு தயாராகும் செயின்ட் ஹெலினா தீவு

செயின்ட் ஹெலினா தீவில் உள்ள அதிகாரிகள் தற்போது ஜொனாதனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தயார் செய்து வருகின்றனர். ஜொனாதனின் பிறந்தநாள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜொனாதனை சந்திக்கும் அனைவரும் அதன் கால்தடத்தின் படத்தை பெறுவார்கள் என்றும் செயின்ட் ஹெலினா தீவின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

- உறுதுணைக் கட்டுரை: CNN

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x