Published : 10 Apr 2016 01:01 PM
Last Updated : 10 Apr 2016 01:01 PM
பிரிட்டனின் மிக உயரிய ‘பவுண்ட்டர்ஸ்’ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவழி தொழிலதிபர் பால் சாகு கடந்த 2010-ம் ஆண்டில் ஆசியன் விருதை தோற்றுவித்தார். பொதுசேவை, வணிகம், கேளிக்கை, கலை, விளையாட்டு என 14 பிரிவுகளில் ஆண்டுதோறும் ஆசியன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
6-வது ஆசியன் விருது வழங்கும் விழா லண்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அன்னை தெரசாவுக்கு பவுண்ட்டர்ஸ் என்ற விருது அறிவிக்கப்பட்டது. தெரசாவின் உறவினர் அஜி போஜாஜியு விருதினைப் பெற்றுக் கொண்டார்.
சிறந்த தொழில் குழுமத் தலைவர் விருது பிரகாஷ் லோகியா, சிறந்த கலைஞர் விருது உஸ்மான், சிறந்த விளையாட்டு வீரர் விருது சோன் ஹாங்-மின், திரைப்படைத் துறை சாதனையாளர் விருது ஆசிப் கபாடியா, சிறந்த டி.வி. நடிகர் விருது குணால் நய்யார் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT