Published : 25 Dec 2021 09:35 AM
Last Updated : 25 Dec 2021 09:35 AM

உலகை உலுக்கும் ஒமைக்ரான்; ஒரே மாதத்தில் 108 நாடுகளில் 151,368 பேருக்கு பாதிப்பு

நியூயார்க்: உலகம் முழுவதும் ஒரு மாதத்தில் 108 நாடுகளில் 151,368 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 122 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 358 ஆக தொற்று அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உலகம் முழுவதும் ஒரு மாதத்தில் 108 நாடுகளில் 151,368 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளன.

ஒமைக்ரானின் முதல் பாதிப்பு நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவில் பதிவாகியது. உலக சுகாதார அமைப்பு அதை இரண்டு நாட்களுக்குள் கவலைக்குரிய ஒரு கரோனா மாறுபாடு என்று அறிவித்தது. நிபுணர்கள் இது வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறியது.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 24 அன்று முதல் ஒமைக்ரான் வழக்கு கண்டறியப்பட்டது. டிசம்பர் 13 வரை நாட்டில் 95 சதவீத ஒமைக்ரான் பாதிப்புகள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன்

பிரிட்டனில், ஏப்ரல் 5 ஆம் தேதி நிலவரப்படி, கரோனா வைரஸ் பாதிப்பு 0.10 சதவிகிதம் மட்டுமே டெல்டாவால் ஏற்பட்டது. இது மே இறுதிக்குள் 74 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்திற்குள், டெல்டா மாறுபாடு கோவிட்-19 பாதிப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது.

பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று காரணமாக கரோனா வைரஸ் எண்ணிக்கை ஒரு மாதத்திற்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 22 -ம் தேதி அன்று பிரிட்டனில் 1 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ஒரே நாளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

அமெரிக்கா

டெல்டா மாறுபாடு ஏப்ரல் 19 க்குள் அமெரிக்காவில் அனைத்து கரோனா வைரஸ் நோய் வழக்குகளில் 0.31 சதவீதத்திற்கு பின்னால் இருந்தது மற்றும் ஜூன் இறுதிக்குள், இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு மாதம் கழித்து, ஜூலை இறுதிக்குள், 90 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு ஏற்ப்பட்டது.


அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 22 நிலவரப்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு கரோனா தொற்று நான்காவது பாதிப்பு ஒமைக்ரான் காரணமாக ஏற்பட்டுள்ளது.

இந்தியா

கரோனா டெல்டா மாறுபாட்டின் பாதிப்பு டிசம்பர் 2020 இன் இறுதியில் இந்தியாவில் தோன்றத் தொடங்கின. முதல் மாதத்தில், மொத்த பாதிப்புகளில் 0.73 சதவீதம் மட்டுமே டெல்டா மாறுபாட்டின் காரணமாக அமைந்தன. அதேசமயம் ஒமைக்ரான் வெறும் 22 நாட்களில் 17 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. ஒமைக்ரான் முதல் பாதிப்பு இந்தியாவில் டிசம்பர் 2 அன்று வெளியே தெரிந்தது. இந்தியாவில் இந்த ஒமைக்ரான் பாதிப்பு 358 ஆக உள்ளன. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் காரணமாக இறப்பு எதுவும் ஏற்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x