Last Updated : 10 Mar, 2016 10:23 AM

 

Published : 10 Mar 2016 10:23 AM
Last Updated : 10 Mar 2016 10:23 AM

எம்.க்யூ.எம். கட்சிக்கு நிதியுதவி வழங்கல்: ‘ரா’ தொடர்பு குறித்து பாக். விசாரணை

பாகிஸ்தானை சீர்குலைப்பதற் காக, முத்தாஹிதா காவுமி இயக் கத்துக்கு (எம்க்யூஎம்) இந்தியா வின் உளவு அமைப்பு (ரா) நிதி யுதவி வழங்குவதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “எம்க்யூஎம் கட்சிக்கு ரா நிதியுதவி வழங்கி வருவதாக பிரபல தொழிலதிபரும் லண்டனில் உள்ள எம்க்யூஎம் கட்சியின் விசுவாசியுமான சர்பராஸ் மெர்ச்சனட் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். குறிப்பாக ஆயுதம் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கு வதாக அவர் கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசா ரணை நடத்துமாறு மத்திய புல னாய்வு அமைப்புக்கு (எப்ஐஏ) பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் உத்தரவிட்டுள் ளார். இதையடுத்து சர்பராஸ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்த அந்தக் குழு திட்டமிட்டுள்ளது” என்றார்.

கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ் தானில் குடியேறிய உருது பேசும் மக்கள், எம்க்யூஎம் கட்சியில் பெரும்பான்மையாக உள்ளன தாகக் கூறப்படுகிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு ரா அமைப்பு இத்தகைய செயலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x