Published : 31 Oct 2021 12:57 PM
Last Updated : 31 Oct 2021 12:57 PM

பாகிஸ்தானின் வங்கியில் சைபர் தாக்குதல்: பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

இஸ்லாமாபாத்

நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள், உலகின் எந்த பகுதியில் இருந்தோ இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் வங்கியின் பணத்தை பெருமளவில் திருடும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சைபர் தாக்குதலில், நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தானுக்கு நிதி இழப்பு அல்லது தரவு மீறல் எதுவும் ஏற்படவில்லை் என வங்கி ரிவித்துள்ளது. அதேசமயம் இந்தத் தாக்குதல் வங்கியின் சில சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “என்பிபி இணையப் பாதுகாப்பு மீறல் தொடர்பான சம்பவத்தையடுத்து புகாரளித்துள்ளோம். நாங்களும் விசாரித்து வருகிறோம். எங்கள் வங்கி தரவு மீறல் அல்லது நிதி இழப்பை சந்திக்கவில்லை. தேவைப்படும் இடங்களில் சர்வதேச தொழில் திறன் மற்றும் தொழில்துறையில் முன்னணி பாட நிபுணர்களைப் பயன்படுத்தி சரிசெய்தல் முயற்சிகள் நடந்து வருகின்றன’’ எனக் கூறியுள்ளது.

வேறு எந்த வங்கியும் இதுபோன்ற சம்பவத்தை தெரிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. வங்கி அமைப்பின் பாதுகாப்பையும் உறுதியையும் உறுதி செய்வதற்காக மத்திய வங்கியும் தற்போது நிலைமையை கண்காணித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட அமைப்புகளை தனிமைப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுத்ததாக வங்கி கூறியுள்ளது. வாடிக்கையாளர் அல்லது நிதி தரவு எதுவும் சமரசம் செய்யப்படவில்லை. எனவே மக்கள் அஞ்ச வேண்டாம் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் தடைபட்டுள்ளன. இந்த மீறலை நிவர்த்தி செய்ய வங்கி ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் வங்கி தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை காலைக்குள் அத்தியாவசிய வாடிக்கையாளர் சேவைகள் மீட்டமைக்கப்படும் என்று வங்கி உறுதியளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x