

சிரியாவில் ராணுவ பேருந்தில் குண்டு வெடித்ததில் பலர் பலியாகினர்.
இதுகுறித்து பிரிட்டனில் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் போர் கண்காணிப்புக் குழு தரப்பில், “ சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் நின்றுக் கொண்டிருந்த ராணுவ பேருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். சிரியாவில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மிகப் பெரிய குண்டு வெடிப்பு இதுவாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கோழைதனமான தாக்குதல் என்று டமஸ்கஸ் போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சிரியா போர்
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்தின.
இந்த நிலையில் தேர்தலில் பஷார் அல் ஆசாத் வெற்றி பெற்றார். மேலும், இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேலைப் பொறுத்தவரை, மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இந்த நிலையில் சிரியாவில் ராணுவ வீரர்களை மையமாகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.