Published : 19 Oct 2021 06:49 PM
Last Updated : 19 Oct 2021 06:49 PM

வங்கதேசத்தில் வன்முறை; உடனடியாக நடவடிக்கை எடுக்க ஷேக் ஹசீனா உத்தரவு

டாக்கா

வங்கதேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவை போலவே வங்களதேசத்தில் இந்து கோயில்களில் துர்கா பூஜை விழா நடந்து வருகிறது. அங்குள்ள கொமில்லா நகரில் இந்து கோயில்களில் கும்பல் ஒன்று திடீரென்று தாக்குதல் நடத்தியது.

துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த பக்தர்களை தாக்கினர்.
சந்த்பூர், ஹாஜிகன்ஜ், பெகுலா உள்ளிட்ட நகரங்களிலும் கோயில்கள் தாக்குதல்கள் நடத்தன.

இதையடுத்து நான்கு நகரங்களில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் அனுப்பட்டுள்ளனர். வன்முறையில் 4 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர்.

சமூக ஊடகங்களில் மத ரீதியாக தவறான தகவல் பரவியதே கலவரம் ஏற்பட காரணம் என விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக் கோயில்கள் அருகே அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தல்கள் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து வங்கதேச அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானுக்கு உத்தரவிட்டார். சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x