Published : 15 Jun 2014 01:43 AM
Last Updated : 15 Jun 2014 01:43 AM

அமெரிக்க அறிவியல் வாரியத்தில் இந்தியர்

அமெரிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக அமெரிக்க இந்தியரான சேதுராமன் பஞ்ச நாதனை அந்நாட்டு அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரபல விஞ்ஞானியான சேதுராமன் பெங்களூர் ஐஐடி-யில் எம்.டெக் படித்தவர். முன்னதாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட விவேகானந்தா கல்லூரியில் 1981-ம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்றார். 1986-ல் சென்னையில் டேட்டா கம்யூனிகேசன் இன்ஜினீய ராக பணியாற்றினார்.

பின்னர் கனடா சென்று அங்குள்ள ஒடாவா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக் காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த அவர், 2009-ம் ஆண்டு முதல் கம்யூட்டிங் அண்ட் இன்பர்மேட்டிங் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகி றார். 400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இப்போது அவரை அமெரிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக ஒபாமா நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப் பட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x