Published : 18 Sep 2021 01:59 PM
Last Updated : 18 Sep 2021 01:59 PM

காபூல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கா மன்னிப்பு

காபூலில் தவறுதலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

காபூலில் கடந்த மாதம் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள்10 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், “ எங்கள் விசாரணை முடிவில், காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன்தாக்குதல் மிகத் தவறான ஒன்று என்று தெரிய வந்துள்ளது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக காபூல் விமான நிலையத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. இதனை அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும் என தலிபான்கள் குற்றம் சுமத்தினர்.

பின்னணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x