Published : 09 Sep 2021 05:23 PM
Last Updated : 09 Sep 2021 05:23 PM

ஸ்பெயினிடமிருந்து கரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யும் நியூசிலாந்து

கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஸ்பெயினிலிருந்து பைஸர் கரோனா தடுப்பூசியை நியூசிலாந்து இறக்குமதி செய்கிறது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக நியூசிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. மக்கள் தொகை நெருக்கம் கொண்ட ஆக்லாந்தில் கடும் ஊரடங்கு நிலவுகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் கரோனா தடுப்பூசியை விரைவாக செலுத்த நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஸ்பெயினிடமிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான பைஸர் கரோனா தடுப்பூசி நியூசிலாந்து இறக்குமதி செய்கிறது. இவ்வாரமே பைஸர் தடுப்பூசிகள் நியூசிலாந்து வந்துவிடும் என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

நியூசிலாந்தில் இதுவரை 31% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x