Published : 08 Sep 2021 03:38 PM
Last Updated : 08 Sep 2021 03:38 PM

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிரேசில் மாடல்

பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலரா தன்னை தானே திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து ஊடகங்கள், “ 33 வயதான பிரேசிலின் மாடலான கிரிஸ் கேலரா தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என்ற தீர்மானித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார். கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இத்திருமணம் குறித்து கிரிஸ் கேலரா கூறும்போது, “ நான் எப்போதும் எனது வாழ்கையில் தனியாக இருக்க பயம் கொள்வேன். ஆனால் தற்போது என்னை குறித்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என நான் உணர்திருக்கிறேன். அதனை உணர்ந்த நிலையில் அதனை கொண்டாட முடிவு செய்தேன். என்னை நானே திருமணம் செய்து கொள்வது அற்புதமாக இருந்தது.” என்றார்.

இந்த நிலையில் கிரிஸ் கேலராவின் இந்த முடிவை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதற்கு, “ என்னை மற்றவர்களிடம் நிரூபிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் அவர்களின் கருத்துகளை பார்ப்பதில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x