Published : 06 Sep 2021 07:53 PM
Last Updated : 06 Sep 2021 07:53 PM

லண்டன் செல்லவிருந்த விமானத்தில் எறும்பு: பயணிகள் வேறு விமானத்துக்கு மாற்றம்

லண்டன் செல்லவிருந்த விமானத்தில் எறும்பு இருந்ததையடுத்து பயணிகள் வேறு விமானத்துக்கு மாற்றப்பட்டனர்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்லவிருந்தது ஏ1-111 விமானம். இந்த விமானத்தில் பூட்டான் இளவரசர் ஜிக்மே நாம்கியெல் வாங்சுக் இருந்தார். ஆனால், விமானம் புறப்படுவதற்கு முன்னர் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் இருந்த பகுதியில் எறும்புகள் ஊர்வது கண்டறியப்பட்டது. இது குறித்து பயணிகள் விமான சிப்பந்திகளிடம் தெரிவித்ததின் பேரில் அந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் வேறு விமான்னத்துக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் சவுதி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. விமானத்தின் ஜன்னலில் விரிசல் இருந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணிகள் இல்லை. அது சரக்கு விமானம். இருந்தாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த மே மாதம் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. விமானத்தில் வவ்வால் ஒன்று இருந்ததால் விமானம் திரும்பியதோடு வேறு விமானத்தில் பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x