Published : 02 Sep 2021 03:51 PM
Last Updated : 02 Sep 2021 03:51 PM

சீன கரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வடகொரியா

சீனாவிலிருந்து வந்த 30 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “சீனாவிலிருந்து கரோனா பரவுகிறது என்ற தகவல் வெளியானவுடன் முதல் நாடாக நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது வடகொரியா. இதுவரை வடகொரியாவில் ஒருவருக்கும் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தாத நிலையில், கரோனா தடுப்பூசிகளை வடகொரியாவுக்கு சீனா வழங்கி வந்தது.

இந்நிலையில், சீனா வழங்கிய சுமார் 30 லட்சம் சினோவாக் கரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது. வடகொரியா நிராகரித்த கரோனா தடுப்பூசிகள் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்தியை யுனிசெஃப் அமைப்பும் உறுதி செய்துள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x